Advertisement

சட்டசபையில் திமுக – தவெக மோதல்: 2006 கலைஞர் ஆட்சி குறித்த விமர்சனத்திற்கு உதயநிதி ஆவேசம்.

தமிழகச் சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, புதிய அரசுக்கும் எதிர்க்கட்சியான திமுக-விற்கும் இடையே கடும் காரசாரமான விவாதம் நடைபெற்றது. 2006-ஆம் ஆண்டு அமைந்த கலைஞர் தலைமையிலான திமுக ஆட்சியை, “குதிரை பேரத்தின் மூலம் நிலைபெற்ற ஆட்சி” என்று முதலமைச்சர் விஜய் விமர்சித்ததற்கு, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மிகக் கடுமையான பதிலடியைக் கொடுத்துள்ளார்.

முதலமைச்சர் விஜய்யின் விமர்சனத்திற்குப் பதில் அளித்த உதயநிதி, “2006-ஆம் ஆண்டு அமைந்த திமுக ஆட்சி என்பது, உங்களைப் போல எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.-க்களைக் கடன் வாங்கியோ அல்லது குதிரை பேரத்தில் விலைக்கு வாங்கியோ அமைக்கப்பட்டதல்ல. அது முழுக்க முழுக்க திமுக கூட்டணிக் கட்சிகளின் முழு ஆதரவோடும், தமிழக மக்களால் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி,” என்று சுட்டிக்காட்டினார்.

Advertisement

தொடர்ந்து பேசிய அவர், அதிமுக நிர்வாகிகளை வளைத்துப் பிடிப்பதாக நிலவும் புகார்களை முன்வைத்து விஜய்யை விமர்சித்தார். “எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ அல்லது சோஃபா செட் அனுப்பி ஆதரவு திரட்டியோ கலைஞர் ஆட்சியை நடத்தவில்லை. அது ஒரு மைனாரிட்டி அரசு என்று நீங்கள் சொல்வது உங்கள் அரசியல் புரிதலின்மையைக் காட்டுகிறது. அது மக்களின் பேராதரவு பெற்ற கூட்டணி அரசு,” என்று உதயநிதி ஆவேசமாகத் தெரிவித்தார்.

இந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் போது திமுக-வினர் விஜய்யின் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். அப்போது பேசிய உதயநிதி, “இது ‘ரீல்ஸ்’ அரசா அல்லது ‘ரியல்’ அரசா?” என்று கேள்வி எழுப்பினார். முன்னதாக, அதிமுக-வின் 25 முக்கிய நிர்வாகிகள் நீக்கப்பட்டதும், அவர்கள் விஜய்க்கு ஆதரவு தெரிவித்ததும் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

Advertisement

முதலமைச்சர் விஜய்யின் நிதி நெருக்கடி குறித்த புகார்களுக்கு ஏற்கனவே மு.க. ஸ்டாலின் பதிலளித்திருந்த நிலையில், இன்று சட்டசபையில் உதயநிதி ஸ்டாலின் கொடுத்த இந்தப் பதிலடி தவெக – திமுக இடையிலான அரசியல் மோதலை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement