Advertisement

மின்தடை: தாம்பரம் அரசு மருத்துவமனையில் பரபரப்பு; டயாலிசிஸ் நோயாளிகள் அவதி

தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட 50வது வார்டில் செயல்பட்டு வரும் அரசு சுகாதார நிலையத்தில் ஏற்பட்ட திடீர் மின்தடையால் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தகவலின்படி, அரசு சுகாதார நிலையத்தில் அரைமணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது டயாலிசிஸ் சிகிச்சை பெற்று கொண்டிருந்த நோயாளிகள் பெரும் சிரமத்தை சந்தித்தனர். உயிர்காக்கும் சிகிச்சைகளில் ஒன்றான டயாலிசிஸ் சிகிச்சை நடைபெற்று கொண்டிருந்த நேரத்தில் மின்சாரம் தடைபட்டதால் நோயாளிகளின் உறவினர்களும் பதற்றமடைந்தனர்.

Advertisement

மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்திருந்த நோயாளிகள் மற்றும் பொதுமக்கள், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக, மருத்துவமனைகளில் உள்ள ஜெனரேட்டர்கள் மற்றும் மாற்று மின்சார வசதிகள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

மருத்துவமனைகளில் ஏற்படும் மின்தடை நோயாளிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது என்பதால், சம்பவம் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

இந்த சம்பவம் தாம்பரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement