Advertisement

சிங்கபெருமாள் கோவில்: குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளைஞர் உயிரிழப்பு

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோவில் பகுதியில், திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாததால் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படும் இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிங்கபெருமாள் கோவில் அருகே உள்ள செங்குன்றம் ஏரிப் பகுதியில் ஆண் ஒருவர் உயிரிழந்த நிலையில் இருப்பதாக நேற்று போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement

போலீசார் மேற்கொண்ட விசாரணையில், உயிரிழந்தவர் சிங்கபெருமாள் கோவில் முத்துமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த முகேஷ் (34) என்பது தெரியவந்தது. அவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.

முகேஷுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றிருந்தது. குழந்தை இல்லாதது தொடர்பாக அவர் மன உளைச்சலில் இருந்து வந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

இளைஞரின் திடீர் உயிரிழப்பு அவரது குடும்பத்தினரையும், உறவினர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த சம்பவம் சிங்கபெருமாள் கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement