Advertisement

SBI வங்கியில் 7,150 அப்ரண்டிஸ் பணியிடங்கள்.. டிகிரி முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான State Bank of India சார்பில் நாடு முழுவதும் காலியாக உள்ள 7,150 அப்ரண்டிஸ் (Apprentice) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வங்கித்துறையில் பணிபுரிய விருப்பமுள்ள இளைஞர்கள் மத்தியில் இந்த அறிவிப்பு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள், அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பு (Degree) முடித்திருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ.15,000 உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்த அப்ரண்டிஸ் பயிற்சி வாயிலாக வங்கித் துறையின் நடைமுறை பணிகள், வாடிக்கையாளர் சேவை, வங்கி நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நேரடி அனுபவம் பெற முடியும். மேலும், வங்கித் துறையில் எதிர்கால வேலைவாய்ப்புகளுக்கான அனுபவமாகவும் இது பயன்படும்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் நடைமுறை தற்போது தொடங்கியுள்ள நிலையில், விண்ணப்பிக்க கடைசி தேதி வரும் ஜூன் 8 என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

Advertisement

வங்கித்துறையில் நல்ல எதிர்காலத்தை உருவாக்க விரும்பும் பட்டதாரிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என வேலைவாய்ப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தகவலை டிகிரி முடித்த நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து பயன்பெறச் செய்யுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement