Advertisement

“எல்லாவற்றுக்கும் கேள்வி கேட்கிறார்கள் Gen Z!” – ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேச்சு!

இன்றைய தலைமுறையினரான Gen Z இளைஞர்கள் அனைத்திற்கும் கேள்வி கேட்கும் குணம் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்றும், அவர்களுக்கு அன்பையும் நேரத்தையும் வழங்கி உரிய காரணங்களுடன் நியாயமான விளக்கங்களை அளிக்க வேண்டும் என்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் வலியுறுத்தியுள்ளார்.

நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், தற்போதைய தலைமுறை இளைஞர்களின் சிந்தனைப்போக்கு மற்றும் சமூக அணுகுமுறை குறித்துத் தனது கருத்துக்களை வெளிப்படையாகப் பகிர்ந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “நாங்கள் இளைஞர்களாக இருந்த காலத்தில் மூத்தவர்கள் கூறுவதை எதையும் யோசிக்காமல் அப்படியே ஏற்றுக்கொண்டு கீழ்ப்படியும் சூழல் நிலவியது. ஆனால், இன்றைய Gen Z தலைமுறையினர் அப்படி இல்லை; அவர்கள் தங்களின் சந்தேகங்கள் குறித்துத் துணிச்சலாக அனைத்திற்கும் கேள்வி கேட்கிறார்கள்” எனக் குறிப்பிட்டார்.

Advertisement

மேலும் தொடர்ந்த அவர், “இன்றைய இளைஞர்களின் இந்த கேள்வி கேட்கும் இயல்பு தவறானது அல்ல. நாம் அவர்களுக்கு உரிய காரணங்களுடன் கூடிய நியாயமான விளக்கங்களை அளிக்க வேண்டும். அவர்களுக்கு அன்பையும் நமது நேரத்தையும் செலவிட்டு விஷயங்களைப் புரிய வைக்க வேண்டும்” என்று தெரிவித்தார். தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் இளைஞர்களின் எண்ண ஓட்டத்தைப் புரிந்து கொண்டு அவர்களுக்கு வழிகாட்ட வேண்டியதன் அவசியத்தை ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் சுட்டிக்காட்டியிருப்பது அரசியல் மற்றும் சமூக களத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Advertisement

 

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement