Advertisement

“பழனி கோயில் நில மோசடி வழக்கு:” 4 பேர் கைது; 84 பேர் சாட்சிகளாகச் சேர்ப்பு – மதுரை அமர்வில் தகவல்!

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி மடத்திற்குச் சொந்தமான நிலங்கள் போலி ஆவணங்கள் மூலம் முறைகேடாகப் பத்திரப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 84 பேர் சாட்சிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி மடத்திற்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்கள், சட்டத்திற்குப் புறம்பாகப் போலி ஆவணங்கள் மூலம் பத்திரப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறி தொடரப்பட்ட வழக்குகள் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணையில் இருந்து வருகின்றன. இம்முறைகேட்டில் அதிகாரிகள் மற்றும் இடைத்தரகர்களின் பங்கு குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Advertisement

இந்நிலையில், இவ்வழக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, காவல்துறை சார்பில் வழக்கின் தற்போதைய நிலவரம் குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதில், பழனி கோயில் மற்றும் மடத்திற்குச் சொந்தமான நில மோசடி விவகாரத்தில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு இதுவரை 4 முக்கியக் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

மேலும், இந்த நிலப் பத்திரப் பதிவு முறைகேடு தொடர்பாக வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களும் தீவிரமாகச் சரிபார்க்கப்பட்டு வருவதாகவும், குற்றத்தை நிரூபிக்கும் வகையில் சார் பதிவாளர் அலுவலக ஊழியர்கள், நில உரிமையாளர்கள் மற்றும் இடைத்தரகர்கள் உட்பட மொத்தம் 84 பேர் சாட்சிகளாகச் சேர்க்கப்பட்டு விசாரணை வரம்பிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை அதிகாரிகளால் தெளிவுபடுத்தப்பட்டது.

Advertisement

 

 

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement