Advertisement

KAS பேச்சை உதாசீனப்படுத்திவிட்டேன்: OPS

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தனது அரசியல் நிலை குறித்து ஆதரவாளர்களிடம் வருத்தம் தெரிவித்ததாக அரசியல் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, “செங்கோட்டையன் கூறிய ஆலோசனையை ஏற்றிருந்தால் இன்று அரசின் முக்கிய பொறுப்பில் இருந்திருப்பேன்” என்று அவர் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக அரசியலில் கடந்த சில மாதங்களாக பல்வேறு கூட்டணி மற்றும் கட்சி மாற்ற பேச்சுகள் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. அந்த சூழலில், ஓபிஎஸ்ஸை, செங்கோட்டையன் K. A. Sengottaiyan (KAS) தவெக கூட்டணிக்குள் கொண்டு வர தீவிர முயற்சி மேற்கொண்டதாக கூறப்பட்டது. ஆனால், அந்த முயற்சியை OPS ஏற்காமல், பின்னர் திமுக அணியுடன் இணைந்து செயல்படத் தொடங்கினார்.

Advertisement

தற்போது அவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தாலும், இதுவரை கட்சியிலோ அரசிலோ முக்கிய பொறுப்புகள் வழங்கப்படாதது குறித்து அவருக்கு அதிருப்தி இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. சமீபத்தில் தனது நெருங்கிய ஆதரவாளர்களுடன் நடைபெற்ற ஆலோசனையின் போது, அரசியல் முடிவுகள் குறித்து OPS மனவேதனை வெளியிட்டதாக கூறப்படுகிறது.

திமுகவில் இணைந்ததன் மூலம் அரசியல் ரீதியாக புதிய வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்த்த OPS தரப்பு, தற்போது அமைதியான நிலைப்பாட்டில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில், அவருக்கு எதிர்காலத்தில் முக்கிய பொறுப்பு வழங்கப்படுமா என்ற கேள்வியும் அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.

Advertisement

இந்த விவகாரம் தொடர்பாக OPS அல்லது திமுக தரப்பில் அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் வெளியாகவில்லை. இருந்தாலும், தமிழக அரசியலில் இது புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement