Advertisement

அதிக மகசூல் பெறும் நெல் விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் பரிசு; விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் திருந்திய நெல் சாகுபடி முறையை பின்பற்றி அதிக மகசூல் பெறும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், தமிழக அரசு சார்பில் நாராயணசாமி நாயுடு விருதுடன் ரூ.5 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ், குறைந்தபட்சம் 2 ஏக்கர் பரப்பளவில் சன்ன ரக நெல் பயிரிட்டு, அதிக மகசூல் ஈட்டிய விவசாயிகள் போட்டியில் பங்கேற்கலாம். தகுதியான விவசாயிகள் தங்களது விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தில் வரும் மார்ச் 31, 2027-க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

Advertisement

விண்ணப்பங்கள் மற்றும் தகுதி விவரங்கள் குறித்து மேலும் தகவல் அறிய, அருகிலுள்ள வேளாண் அலுவலர்கள் அல்லது வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டம் மூலம் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அதிக உற்பத்தி பெறும் விவசாயிகளை கண்டறிந்து பாராட்டுவது நோக்கமாகும்.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement