Advertisement

“மக்களின் வலியை உணர்ந்து கனிமவள ஏற்றுமதிக்குத் தடை” – அமைச்சர் பிரபு

தமிழ்நாட்டின் இயற்கைச் செல்வங்கள் சுரண்டப்படுவதையும், அதனால் பொதுமக்கள் சந்திக்கும் இன்னல்களையும் உன்னிப்பாகக் கவனித்து, மக்களின் வேதனையை உணர்ந்தே முதலமைச்சர் விஜய் கனிமவள ஏற்றுமதிக்குத் தற்காலிகத் தடை விதித்துள்ளார் என்று புவியியல் மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் பிரபு மிகத் தெளிவாகத் தெரிவித்துள்ளார்.

மாநில எல்லைகளைத் தாண்டி பிற மாநிலங்களுக்குக் கருங்கல், ஜல்லி மற்றும் எம்-சாண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்கள் தங்கு தடையின்றி ஏற்றுமதி செய்யப்படுவதால் தமிழ்நாட்டில் செயற்கையானக் கட்டுமானப் பொருட்கள் தட்டுப்பாடு நிலவுவதாகவும், உள்ளூர் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாத நிலை எழுவதாகவும் புகார்கள் எழுந்தன.

Advertisement

இதைக் கள ஆய்வுகளின் மூலமாகவும் உளவுத்துறைத் தகவல்கள் மூலமாகவும் அறிந்துகொண்ட முதலமைச்சர் விஜய், உடனடி நடவடிக்கை எடுத்து முதற்கட்டமாக கனிமவள ஏற்றுமதிக்குத் தடை பிறப்பித்து உத்தரவிட்டார். செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பிரபு, “கள நிலவரத்தையும், சூழலியல் பாதிப்புகளையும் பொதுமக்கள் படும் அவதிகளையும் விரிவாக ஆராய்ந்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தற்காலிகமாக அமல்படுத்தப்பட்டுள்ள இத்தடையை நீட்டித்து, கனிமவள ஏற்றுமதிக்கு நிரந்தரத் தடை விதிப்பது தொடர்பாக முதலமைச்சர் விஜய்யுடன் நேரில் விரிவான ஆலோசனை நடத்தப்படும்” என்று குறிப்பிட்டார். கனிமவளத் துறை தலைமைச் செயலக வட்டாரங்கள் மற்றும் அரசியல் காய்நகர்த்தல்களில் இத்தகவல் தற்போது பெரும் பரபரப்பையும் காரசாரமான விவாதங்களையும் கிளப்பியுள்ளது.

Advertisement

 

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement