Advertisement

 இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிட “பாகிஸ்தானுக்கு எந்த தகுதியும் இல்லை – ரந்தீர் ஜெய்ஸ்வால்!

எல்லை கடந்த பயங்கரவாதத்தைத் தங்களது அதிகாரப்பூர்வ அரசு கொள்கையாக (Instrument of State Policy) வைத்திருக்கும் பாகிஸ்தான் நாட்டிற்கு, இந்தியாவின் உள்விவகாரங்கள் குறித்தோ அல்லது நீதித்துறை சார்ந்த நடவடிக்கைகள் குறித்தோ கருத்து தெரிவிக்க எவ்வித தகுதியோ, உரிமையோ (Locus Standi) கிடையாது என்று இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் மிகத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் உள்விவகாரங்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகள் தொடர்பான சில விவகாரங்களில் பாகிஸ்தான் அரசு அண்மையில் தேவையின்றி தலையிட்டு, சில கருத்துக்களையும் அபாண்டமான குற்றச்சாட்டுகளையும் முன்வைத்திருந்தது. இதற்கு இந்தியத் தரப்பில் தகுந்த பதிலடி கொடுக்கும் வகையில், புதுடெல்லியில் நடைபெற்ற வாராந்திர செய்தியாளர்கள் சந்திப்பில் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் அதிகாரப்பூர்வ விளக்கமளித்தார்.

Advertisement

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ரந்தீர் ஜெய்ஸ்வால், “பாகிஸ்தான் தரப்பில் இந்தியாவின் உள்விவகாரங்கள் குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையை இந்தியா முற்றிலும் நிராகரிக்கிறது. ஒரு தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பிற்கும், அதன் உறுப்பினர்களுக்கும் ஆதரவாகப் பாகிஸ்தான் இத்தகைய அறிக்கையை வெளியிட்டிருப்பது எமக்கு வியப்பை அளிக்கவில்லை. ஏனெனில், பல தசாப்தங்களாகப் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிப்பதையும், அப்பாவி மக்களின் உயிர்களைப் பறிக்கும் வன்முறைகளை நியாயப்படுத்துவதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ள ஒரு நாட்டிடமிருந்து இதைத்தான் எதிர்பார்க்க முடியும்” என்று கடுமையாகச் சாடினார்.

மேலும், இந்தியா மீது வீண் பழிகளைச் சுமத்தி, உலக அரங்கில் போலியான கதைகளைக் கட்டமைப்பதை விடுத்து, தங்களது நாட்டில் தொடர்ந்து அரங்கேறி வரும் மிக மோசமான மனித உரிமை மீறல்கள் குறித்தும், சொந்த நாட்டு மக்களின் நீண்ட கால அவதி மற்றும் உள்நாட்டுத் தோல்விகள் குறித்தும் பாகிஸ்தான் சுயபரிசோதனை (Introspect) செய்ய வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.

Advertisement

 

 

 

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement