Advertisement

“தொகுதி நலனுக்காகவே தவெகவுக்கு ஆதரவு” – அதிமுக எம்எல்ஏ

மரகதம் குமரவேல் தவெகவுக்கு ஆதரவு அளித்தது குறித்து விளக்கம் அளித்துள்ளார். Maduranthakam சட்டமன்றத் தொகுதியை சேர்ந்த அதிமுக உறுப்பினரான அவர், தொகுதி மக்களின் நலனைக் கருத்தில் கொண்டே இந்த முடிவை எடுத்ததாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள விளக்கத்தில், தாம் முன்பு எம்எல்ஏவாக இருந்தபோது சட்டமன்றத்தில் மக்களின் பல்வேறு கோரிக்கைகளை தொடர்ந்து முன்வைத்ததாக கூறினார். ஆனால், அந்த கோரிக்கைகள் திமுக அரசும் அதிகாரிகளும் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் நிராகரித்ததாக குற்றம்சாட்டினார்.

Advertisement

மதுராந்தகம் தொகுதிக்கான சாலை, குடிநீர், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் மக்கள் நலத் திட்டங்கள் பல இன்னும் நிறைவேறாமல் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், இனிவரும் காலங்களில் தொகுதி மக்களுக்கு தேவையான திட்டங்களை பெற்றுத்தர வேண்டும் என்பதற்காகவே தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளித்ததாக மரகதம் குமரவேல் தெரிவித்தார்.

Advertisement

அவரது இந்த கருத்து அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவின் சில எம்எல்ஏக்கள் தவெகவுக்கு ஆதரவு அளித்ததாக கூறப்படும் சூழலில், மரகதம் குமரவேலின் விளக்கம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement