Advertisement

மதுராந்தகத்தில் 30 ஆயிரம் பேர் தவெகவில் இணைப்பு; எடப்பாடி பழனிசாமியை விமர்சித்த ஆதவ் அர்ஜுனா

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) மாபெரும் இணைப்பு விழாவில், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாற்றுக் கட்சிகளில் இருந்து தவெகவில் இணைந்ததாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். முன்னாள் எம்எல்ஏ மரகதம் குமரவேல் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, மாநாட்டை ஒத்த வகையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

மதுராந்தகம் ஜிஎஸ்டி சாலையில் நடைபெற்ற இந்த விழாவில், தவெக பொதுச்செயலாளரும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சருமான புஸ்ஸி என். ஆனந்த், மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் த. சரத்குமார், அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நிகழ்ச்சி நடைபெற்றது.

Advertisement

விழாவில் பேசிய பொதுப்பணி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “அதிமுக என்ற மாபெரும் கப்பல் ஒருபோதும் மூழ்காது. அதிமுகவும் தவெகவும் ஒரே அரசியல் சிந்தனையை கொண்டவை. ஆனால் தற்போது அரசியல் ரீதியாக மூழ்கிக் கொண்டிருப்பது எடப்பாடி பழனிசாமி மட்டுமே” என்று விமர்சித்தார்.

மேலும், சமூக நீதி, கூட்டணி அரசியல் மற்றும் தமிழக அரசியல் சூழல் குறித்து பேசிய அவர், திமுக மற்றும் அதிமுக தலைமைகள் மீது பல்வேறு கேள்விகளை எழுப்பினார். தற்போதைய தவெக அரசில் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Advertisement

இந்த இணைப்பு விழா செங்கல்பட்டு மாவட்ட அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் கருத்துகள் அரசியல் விவாதத்தையும் தூண்டியுள்ளன.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement