Advertisement

கம்யூனிஸ்ட் இல்லாத இந்தியா! கேரளாவில் காங்கிரஸ் வெற்றி; 49 வருட வரலாறு முடிவுக்கு வந்தது!

இந்திய அரசியல் வரலாற்றில் அரை நூற்றாண்டு காலத்திற்குப் பிறகு ஒரு மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. இடது சாரி அரசியலின் வலுவான தளமாகவும், ‘கடைசி கோட்டை’யாகவும் கருதப்பட்ட கேரளாவில், கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான எல்டிஎஃப் (LDF) அரசு படுதோல்வியைச் சந்தித்துள்ளது. இதன் மூலம், 1977-ஆம் ஆண்டிற்குப் பிறகு முதல் முறையாக இந்தியாவில் எந்தவொரு மாநிலத்திலும் இடது சாரி ஆட்சி இல்லாத நிலை உருவாகியுள்ளது.

கேரளாவில் ஆட்சி மாற்றம் கேரள சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அம்மாநில அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, மொத்தமுள்ள 140 தொகுதிகளில் 100 இடங்களில் முன்னிலை பெற்று ஆட்சியைப் பிடிப்பது உறுதியாகியுள்ளது.

Advertisement

2016 முதல் பினராயி விஜயன் தலைமையில் இரண்டு முறை தொடர்ச்சியாக ஆட்சியில் இருந்த இடது சாரி முன்னணி, இந்த முறை மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்து அரியணையை விட்டு இறங்குகிறது. ஆட்சி அமைக்கத் தேவையான 71 இடங்களைவிடக் கூடுதல் இடங்களில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.இடது சாரிகளின் வீழ்ச்சி: ஒரு பார்வைஇந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஒரு காலத்தில் கோலோச்சிய இடது சாரிகள், தற்போது தங்களின் அனைத்துக் கோட்டைகளையும் இழந்துள்ளனர்.

மேற்கு வங்கம், 1977 – 2011 (தொடர்ச்சியாக 34 ஆண்டுகள்),2026 தேர்தலில் வெறும் ஒரு தொகுதியில் மட்டுமே முன்னிலை.

Advertisement

திரிபுரா,1978-88 மற்றும் 1993-2018 வரை,60 இடங்களைக் கொண்ட சட்டமன்றத்தில் வெறும் 11 இடங்களில் மட்டுமே உள்ளனர்.

கேரளா,1957 முதல் பல்வேறு காலகட்டங்களில் ஆட்சி,2026 தேர்தலில் ஆட்சியை இழந்து பெரும் பின்னடைவு.

இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் முதல் பினராயி விஜயன் வரை பல ஆளுமையான தலைவர்கள் கேரளாவை இடது சாரி சித்தாந்தத்தின் அடையாளமாக மாற்றியிருந்தனர். ஆனால், தற்போது கேரளா கைவிட்டுள்ள நிலையில், 49 ஆண்டுகளில் முதல் முறையாக இந்தியா முழுவதும் கம்யூனிஸ்ட் ஆட்சி இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு, பீகார், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களிலும் ஒரு காலத்தில் செல்வாக்குடன் இருந்த இடது சாரிகள், தற்போது மாநில மற்றும் தேசியக் கட்சிகளின் கடும் போட்டிக்கு மத்தியில் தங்கள் பிடியை இழந்துள்ளனர்.தமிழகத்தில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுப் புதிய வரலாறு படைத்துள்ள அதே வேளையில், கேரளாவில் நிகழ்ந்துள்ள இந்த ஆட்சி மாற்றம் தென்னிந்திய அரசியலில் மிகப்பெரிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement