இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 27 திருக்கோயில்களுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்கள் நியமனத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
🛕 27 கோயில்களுக்கு அறங்காவலர் நியமனம்
இந்து சமய அறநிலையத்துறை (HR&CE) கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் 27 திருக்கோயில்களுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்காக தகுதியும் விருப்பமும் உள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. கோயில் நிர்வாகத்தில் பங்கேற்று சேவை செய்ய விரும்புவோருக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.
📝 ஆன்லைன் மற்றும் நேரடி விண்ணப்ப வசதி
விண்ணப்பதாரர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பத்தை நேரடியாக பூர்த்தி செய்யலாம் அல்லது விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து தேவையான ஆவணங்களுடன் சமர்ப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரில் அல்லது விரைவஞ்சல் (Speed Post) மூலமாக சம்பந்தப்பட்ட இணை ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
⏰ ஆகஸ்ட் 5 கடைசி நாள்
அறங்காவலர் நியமனத்திற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் 05-08-2026 மாலை 5.45 மணி என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகுதிகள் குறித்த முழு விவரங்களை இந்து சமய அறநிலையத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பெறலாம்.
மேலும் விவரங்களுக்கு இந்து சமய அறநிலையத்துறையின் அதிகாரப் பூர்வ இணையதளம்
ஆன்லைலைனில் விண்ணப்பிக்க
https://hrce.tn.gov.in/hrcehome/hrce_trusteeshipdetails.php












