Advertisement

“வழக்குகளை ரத்து செய்யாவிட்டால் நாளை முதல் போராட்டம்!” – ‘காக்ரோச் ஜனதா கட்சி’ கெடு!

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளுக்கு எதிராக நியாயம் கேட்டு அமைதி வழியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் உடனடியாக ரத்து செய்யாவிட்டால், நாளை (ஜூலை 28) முதல் மீண்டும் நாடு தழுவிய அளவில் போராட்டங்கள் வெடிக்கும் என ‘காக்ரோச் ஜனதா கட்சி’ (Cockroach Janta Party – CJP) அதிரடியாக அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில், முறைகேடுகளுக்கு எதிராகப் பல்வேறு அமைப்புகளும் மாணவர்களும் வீதியில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டங்களின் போது காவல்துறையினரால் பலர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளைப் பின்வாங்கக் கோரித் தொடர்ந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்தன.

Advertisement

இந்நிலையில், ‘காக்கரோச் ஜனதா கட்சி’யின் முக்கிய நிர்வாகிகள் அவசர செய்திக்குறிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளனர். அதில், “மாணவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கிய நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராகத் தங்கள் உரிமையைக் கேட்டு அமைதியான முறையில் போராடிய மாணவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். இதற்கான முறையான அறிவிப்பு இன்றைக்குள் வெளியாகாவிட்டால், நாளை காலை முதல் மாநிலம் தழுவிய அளவில் மீண்டும் பிரம்மாண்டமான போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்” எனக் கெடு விதித்துள்ளனர்.

ஏற்கனவே E20 பெட்ரோல் விவகாரம் மற்றும் நீட் எதிர்ப்பு இயக்கங்கள் மூலம் சமூக வலைத்தளங்களிலும் களத்திலும் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் ‘காக்கரோச் ஜனதா கட்சி’யின் இந்த மீண்டும் போராட்ட அறிவிப்பு, மாணவர்கள் மத்தியிலும் அரசு வட்டாரங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

 

 

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement