Advertisement

செங்கல்பட்டில் இன்று மழைக்கு வாய்ப்பு!

வட தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, இன்று (மே 29) செங்கல்பட்டு மாவட்டத்தின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement

கடந்த சில நாட்களாக வெப்பம் குறைந்து குளிர்ச்சியான வானிலை நிலவி வரும் நிலையில், இந்த மழை விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் நன்மை பயக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement