Advertisement

செங்கல்பட்டு: 30 மினி பேருந்துகள் சேவை நிறுத்தம்; ஷேர் ஆட்டோக்கள் அதிகரிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் கிராமப்புற மக்களின் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்ய அறிமுகப்படுத்தப்பட்ட மினி பேருந்து திட்டம் தற்போது சவால்களை சந்தித்து வருகிறது. மாவட்டத்தில் இயக்கப்பட்ட 71 மினி பேருந்துகளில், வருவாய் குறைவு காரணமாக 30 பேருந்துகள் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் 1999ஆம் ஆண்டு நகர்ப்புறங்களிலிருந்து கிராமப்புறங்களுக்கு மினி பேருந்துகள் இயக்கப்பட்டன. பின்னர் பல வழித்தடங்களில் சேவை குறைந்ததால், கிராமப்புற மக்கள் போக்குவரத்து வசதிக்காக சிரமங்களை எதிர்கொண்டனர்.

Advertisement

இதையடுத்து, செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம் மற்றும் திருப்போரூர் உள்ளிட்ட பகுதிகளில் மீண்டும் மினி பேருந்துகளை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதன்படி, 2024ஆம் ஆண்டு இறுதியில் நடைபெற்ற ஆலோசனைகளுக்குப் பிறகு, 51 வழித்தடங்களில் மினி பேருந்துகள் இயக்க அனுமதி வழங்கப்பட்டது. பின்னர் கூடுதலாக 20 பேருந்துகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டதால், மொத்தம் 71 மினி பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன.

ஆனால், கிராமப்புறங்களில் பெண்களுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயண திட்டம் நடைமுறையில் இருப்பதுடன், ஷேர் ஆட்டோக்களும் அதிகளவில் இயக்கப்படுகின்றன. பல இடங்களில் விதிமுறைகளை மீறி அதிக பயணிகளை ஏற்றி செல்லும் ஷேர் ஆட்டோக்கள், மினி பேருந்துகளின் பயணிகள் எண்ணிக்கையை குறைத்துள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement

இதன் விளைவாக, போதிய வருமானம் கிடைக்காததால் 30 மினி பேருந்துகள் சேவையிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளன. தற்போது சுமார் 15 பேருந்துகள் மட்டுமே காலை முதல் இரவு வரை தொடர்ந்து இயக்கப்படுகின்றன.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement