Advertisement

கேஸ் கசிந்து தீ விபத்து – தூக்கத்திலேயே பலியான பிஞ்சுகள்

செங்கல்பட்டு அருகே நள்ளிரவில் கேஸ் கசிந்து ஏற்பட்ட தீவிபத்தில், உறங்கிக் கொண்டிருந்த 2 குழந்தைகள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் பெரிய மணியக்காரர் பகுதியில், சுதாமி என்பவர் தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவரின் வீட்டில் நள்ளிரவில் கேஸ் கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் திடீர் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

Advertisement

இந்த தீ விபத்தில் சிக்கி உறங்கிக்கொண்டு இருந்தவர்களில் 2 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒரு குழந்தை மற்றும் தாய் படுகாயத்துடன் மீட்கப்பட்டனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement