Advertisement

செங்கை: நீட் தேர்வு ரத்து கோரி திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்

திராவிடர் கழகம் சார்பில் நீட் தேர்வை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக, செங்கல்பட்டில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள தந்தை பெரியார் சிலை அருகே நடைபெற்ற இந்த போராட்டத்தில், நீட் தேர்வு மாணவர்களுக்கு மன அழுத்தத்தையும் கல்வி சமத்துவமின்மையையும் ஏற்படுத்துவதாக கூறி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Advertisement

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனன் மற்றும் செங்கல்பட்டு நகர கழக செயலாளர் ச. நரேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர். அவர்கள், அரசு பள்ளி மற்றும் கிராமப்புற மாணவர்கள் நீட் தேர்வால் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர் என்றும், மருத்துவ கல்வியில் சம வாய்ப்பை உறுதி செய்ய மத்திய அரசு நீட் முறையை திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

மேலும், சமீபத்தில் நீட் தேர்வு தொடர்பாக எழுந்த முறைகேடு மற்றும் வினாத்தாள் கசிவு சர்ச்சைகள் தேர்வு முறையின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க மாநில அரசும் தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

Advertisement

இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழக நிர்வாகிகள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். போராட்டம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement