Advertisement

செங்கல்பட்டு: சூப்பரான சுற்றுலா இடங்கள்!

கோடை விடுமுறையை மகிழ்ச்சியாக கழிக்க செங்கல்பட்டு மற்றும் சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு மக்கள் அதிக அளவில் சென்று வருகின்றனர். குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் குழந்தைகளுடன் ஒருநாள் சுற்றுலாவுக்கு ஏற்ற பல இடங்கள் இங்கு உள்ளன.

முதலில் அண்ணா உயிரியல் பூங்கா சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் முக்கிய இடமாக உள்ளது. பல்வேறு விலங்குகள் மற்றும் பறவைகளை நேரில் காண முடியும்.

Advertisement

உலக பாரம்பரிய சின்னங்களால் புகழ்பெற்ற மாமல்லபுரம் சுற்றுலாப் பயணிகளை கவரும் முக்கிய தலமாக திகழ்கிறது. அங்குள்ள முதலை வங்கி குழந்தைகளுக்கு சுவாரஸ்யமான அனுபவத்தை வழங்குகிறது.

இயற்கை விரும்பிகளுக்கு வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் சிறந்த தேர்வாகும். பல்வேறு வெளிநாட்டு பறவைகளை இங்கு காணலாம்.

Advertisement

தமிழர் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை அறிய தக்ஷிண் சித்ரா அருங்காட்சியகம் சிறந்த இடமாகும். மேலும், இந்திய கடல் சிப்பி அருங்காட்சியகம் அரிய கடல் உயிரின சேகரிப்புகளால் கவனம் ஈர்க்கிறது.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சட்ராஸ் டச்சு கோட்டை மற்றும் குடும்பத்துடன் படகு சவாரி செய்ய ஏற்ற முட்டுக்காடு படகு குழாம் ஆகிய இடங்களும் சுற்றுலாப் பயணிகளால் விரும்பப்படுகின்றன.

மேலும், கோவளம் கடற்கரை மாலை நேரத்தில் கடற்கரை காட்சிகளை ரசிக்க ஏற்ற அமைதியான இடமாக உள்ளது.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement