Advertisement

“மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு ஆதரவா?” – டெல்டாவில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்!

மேகதாதுவில் அணை கட்டத் துடிக்கும் கர்நாடக அரசுக்குக் மறைமுகமாக ஆதரவளித்து வரும் மத்திய அரசைக் கண்டித்து, வரும் ஆகஸ்ட் 2-ஆம் தேதி காவிரி டெல்டா மாவட்டங்கள் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPM) சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் பி. சண்முகம் அறிவித்துள்ளார்.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு 2018-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் ஒப்புதலைப் பெறத் தேவையில்லை என மாநிலங்களவையில் மத்திய அரசு அளித்த பதில் தமிழக விவசாயிகளிடையேயும் அரசியல் கட்சிகளிடையேயும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

மத்திய அரசின் இந்தத் துரோக நடவடிக்கையைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பி. சண்முகம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “மேகதாதுவில் அணை கட்டுவதற்குக் கர்நாடக அரசுக்கு மத்திய அரசு முழு ஆதரவளித்து வருகிறது என்பது நாடாளுமன்றத்தில் அவர்கள் அளித்த பதிலின் மூலம் அப்பட்டமாக அம்பலமாகியுள்ளது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பைத் தவறாகச் சித்தரித்துத் தமிழ்நாட்டின் நீர் உரிமைகளைப் பறிக்க மத்திய பாஜக அரசு முயல்கிறது” எனக் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், “தமிழகத்தின் கடைமடைப் பாசனப் பகுதிகளான டெல்டா மாவட்டங்களின் விவசாய வாழ்வாதாரத்தைச் சீரழிக்கும் மத்திய அரசின் இந்த ஒருதலைப்பட்சமான போக்கைக் கண்டித்தும், தமிழகத்தின் காவிரி உரிமைகளைப் பாதுகாக்கவும் வரும் ஆகஸ்ட் 2-ஆம் தேதி காவிரி டெல்டா மாவட்டங்களின் அனைத்து முக்கிய நகரங்களிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பிரம்மாண்டக் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்” என அறிவித்துள்ளார். இப்போராட்டத்திற்கு விவசாயிகளும் பொதுமக்களும் திரளாகத் திரண்டு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisement

 

 

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement