Advertisement

“30 ஆட்டோக்கள்… 150 பேருக்குக் கல்வி நிதி!” – தனுஷின் அடுத்தகட்ட நகர்வு அரசியலா?

தமிழ்த் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் தனுஷ், தனது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர் மன்றங்கள் சார்பில் நடத்தப்பட்ட பிரம்மாண்ட நலத்திட்ட உதவிகள் மற்றும் ரத்ததான முகாம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஏழை எளிய குடும்பங்களுக்கு அள்ளிக் கொடுத்து அசத்தியுள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற இச்சிறப்பு நிகழ்வில், தமிழ்நாட்டின் 30 மாவட்டங்களைச் சேர்ந்த ஏழை குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பெருக்கும் வகையில் 30 புதிய ஆட்டோக்களை தனுஷ் இலவசமாக வழங்கினார். அதுமட்டுமின்றி, 150 ஏழை, எளிய பள்ளி மாணவர்களின் எதிர்காலக் கல்வியை ஊக்குவிக்கும் பொருட்டு கல்வி ஊக்கத்தொகையையும் வழங்கிப் பாராட்டினார்.

Advertisement

இந்த நலத்திட்ட உதவிகளின் தொடர்ச்சியாக, தற்போது தனது அகில இந்தியத் தனுஷ் ரசிகர் மன்ற நிர்வாகிகளின் மகள்களுக்கு உயர்கல்வி படிக்க ஆகும் முழுச் செலவையும் தானே ஏற்பதாக அதிரடியாக அறிவித்துள்ளார். குறிப்பாக, பொறியியல் (Engineering) மற்றும் மருத்துவம் (MBBS) ஆகியக் உயர் தொழில்முறை படிப்புகளில் சேரும் ரசிகர்களின் மகள்களுக்கான முழுப் படிப்புச் செலவையும் தனுஷே ஏற்றுக்கொள்வது ரசிகர்களிடையேயும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபகாலமாக ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் மற்றும் மாணவர்களின் கல்வியைக் குறிவைத்துத் தனுஷ் செய்து வரும் இந்தத் தொடர் நற்பணிகளும், மன்றக் கட்டமைப்பு மறுசீரமைப்புகளும் தமிழ் அரசியல் களத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. திரையுலகில் உச்சத்தில் இருக்கும் தனுஷ், விரைவில் நேரடி அரசியல் களம் காண்பார் என்றும், அதற்கான முதற்கட்ட வேலைகளையே இத்தகையச் சமூகப் பணிகளின் மூலம் முன்னெடுத்து வருகிறார் என்றும் சினிமா மற்றும் அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.

Advertisement

 

 

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement