செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட வழக்கறிஞர்கள் சங்க அலுவலகம் இன்று (ஜூன் 19) திறந்து வைக்கப்பட்டது.
இந்த அலுவலகத்தை மாவட்ட நீதிபதி சந்திரசேகரன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் புதிய அலுவலகத்தின் வசதிகளை பார்வையிட்டு, வழக்கறிஞர்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் சங்கத் தலைவர் சிவக்குமார், துணைத் தலைவர் பிரபாகரன், செயலாளர் பாஸ்கரன், பொருளாளர் குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும் ஏராளமான வழக்கறிஞர்கள் மற்றும் சட்டத் துறை சார்ந்தோர் பங்கேற்று புதிய அலுவலக திறப்பு விழாவை சிறப்பித்தனர்.
புதிய அலுவலகம் வழக்கறிஞர்களின் நிர்வாக பணிகள் மற்றும் தொழில்முறை செயல்பாடுகளுக்கு உதவியாக அமையும் என தெரிவிக்கப்பட்டது.





