Advertisement

தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம்: தமிழக அரசு அரசாணை வெளியீடு!

அனைத்துக் கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களின் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை கட்டாயம் பாட வேண்டும் எனத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகச் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்மானத்தைத் தொடர்ந்து, மாநிலத்திலுள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளில் ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ பாடலை கட்டாயம் முதலில் பாட வேண்டும் எனத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Advertisement

தமிழகத்தில் நடைபெறும் அரசு விழாக்கள், கல்வி நிறுவன நிகழ்வுகள் மற்றும் பொது அமைப்புகளின் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது வழக்கத்தில் இருந்து வருகிறது. இந்நிலையில், அனைத்துப் பள்ளிகள், கல்லூரிகள், உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்களின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தை முழுமையாகக் கட்டாயமாகப் பாட வேண்டும் என்பதை வலியுறுத்தி அண்மையில் சட்டசபையில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தற்போது அந்தத் தீர்மானத்திற்குச் சட்டவடிவம் கொடுக்கும் வகையில், தமிழக அரசு அரசாணையை (Government Order) அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இனிவரும் நாட்களில் கல்வி நிறுவனங்கள் மற்றும் பொது அமைப்புகளின் எந்தவொரு நிகழ்ச்சியாக இருந்தாலும், நிகழ்வின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவதை நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும், இதில் எவ்வித விலக்கும் அளிக்கப்பட மாட்டாது என்றும் அந்த அரசாணையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அரசின் இந்த நடவடிக்கைக்குத் தமிழ் ஆர்வலர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

Advertisement

 

 

 

 

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement