Advertisement

“370-வது பிரிவு ரத்தாகி 7 ஆண்டுகள் நிறைவு” – பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்!

ஜம்மு-காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த அரசியலமைப்பின் 370 மற்றும் 35(A) ஆகிய பிரிவுகள் நீக்கப்பட்டு இன்றோடு 7 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இது வரலாற்றின் புதிய அத்தியாயத்தின் தொடக்கம் என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாகத் தமது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர், 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்திற்குப் பிறகு ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் பிராந்திய மக்களின் வாழ்க்கையில் பிரம்மாண்ட மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். அங்கு அதிநவீன உள்கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதுடன், கல்வி, மருத்துவம், தொழில்துறை மற்றும் விளையாட்டுப் பிரிவுகளில் இளைஞர்களுக்கான நல்வாய்ப்புகள் பலமடங்கு அதிகரித்துள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

குறிப்பாக, பத்தாண்டுகளாகத் தங்களது அடிப்படை அரசியலமைப்பு உரிமைகள் மறுக்கப்பட்ட பெண்கள், தாழ்த்தப்பட்டோர் மற்றும் விளிம்புநிலை சமூகத்தினர், இந்திய அரசியலமைப்புச் சட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட்டதன் மூலம் தற்போது உரிய அதிகாரங்களையும் உரிமைகளையும் பெற்றுள்ளதாகப் பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

மேலும், தேசிய ஒருமைப்பாட்டிற்காகத் தன் வாழ்நாளையே தியாகம் செய்த டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியின் 125-வது பிறந்தநாளை தேசமே கொண்டாடும் இந்த தருணத்தில், இந்த 7-ஆம் ஆண்டு நிறைவு நாள் கூடுதல் வரலாற்று முக்கியத்துவம் பெறுகிறது என்றும், அவர் பல தசாப்தங்களுக்கு முன் கண்ட கனவு 2019 ஆகஸ்ட் 5 அன்று நனவானதாகவும் பிரதமர் நினைவு கூர்ந்துள்ளார். ‘விக்சித் பாரத்’ (வளர்ச்சியடைந்த இந்தியா) இலக்கை எட்டுவதில் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் மக்களின் அளப்பரிய பங்களிப்பை உறுதி செய்ய மத்திய அரசு தொடர்ந்து பாடுபடும் என்றும் அவர் தமது பதிவில் உறுதி அளித்துள்ளார்.

Advertisement

 

 

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement