Advertisement

80வது சுதந்திர தினம்: சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு முதல்வர் விருதுகள் வழங்கல்!

80-வது சுதந்திர தின விழாவில் சிறந்த மாநகராட்சியாக கோவைக்கும், சிறந்த நகராட்சியாக போடிநாயக்கனூருக்கும் முதலமைச்சர் விருதுகளை வழங்கிக் கௌரவித்தார்.

நாட்டின் 80-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, தமிழ்நாட்டில் சிறப்பாகச் செயல்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதலமைச்சரின் நல்ஆளுமை மற்றும் தூய்மைப் பணிகளுக்கான விருதுகளை முதலமைச்சர் வழங்கிப் பாராட்டினார்.

Advertisement

சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் நடைபெற்ற 80-வது சுதந்திர தின விழாக் கொண்டாட்டத்தின் போது, பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கும், மக்கள் சேவையில் சிறந்து விளங்கிய உள்ளாட்சி அமைப்புகளுக்கும் மாண்புமிகு முதலமைச்சர் விருதுகளையும் நற்சான்றிதழ்களையும் வழங்கிக் கௌரவித்தார்.

இதில் தமிழ்நாட்டின் சிறந்த மாநகராட்சிக்கான விருதில் கோவை மாநகராட்சி முதல் பரிசைத் தட்டிச் சென்றது. இரண்டாம் பரிசைத் தஞ்சாவூர் மாநகராட்சி பெற்றது. இதற்கான விருதுகளையும் பாராட்டுச் சான்றிதழ்களையும் சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளிடம் முதலமைச்சர் நேரில் வழங்கினார்.

Advertisement

இதேபோல் நகராட்சிகளுக்கான பிரிவில், தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சி முதல் பரிசைப் பெற்று முதலிடம் பிடித்தது; திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகராட்சி இரண்டாம் பரிசை வென்றது. சிறந்த பேரூராட்சிகளுக்கான பிரிவில் தஞ்சாவூர் மாவட்டம் முதல் பரிசைத் தட்டிச் சென்றது. விருதுகள் வழங்கும் நிகழ்வைத் தொடர்ந்து, விருது பெற்ற அனைத்து அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகளுடன் முதலமைச்சர் குழுப் புகைப்படம் (Group Photo) எடுத்துக்கொண்டு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

 

 

 

 

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement