Advertisement

தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்க கோரிக்கை: நலச்சங்கங்கள் மனு

மூவரசம்பட்டு பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆலந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஹரிஷை சந்தித்த பொதுநல சங்க பிரதிநிதிகள், தங்கள் பகுதிகளின் வளர்ச்சி மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பாக முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தனர்.

வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மூவரசம்பட்டுக்கு வந்த எம்.எல்.ஏ. ஹரிஷ், அப்பகுதி மக்களையும் பொதுநல சங்க நிர்வாகிகளையும் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது நலச்சங்கங்கள் சார்பில் மனு ஒன்றும் வழங்கப்பட்டது.

Advertisement

அந்த மனுவில், புனித தோமையார் மலை ஒன்றியத்தின் கீழ் செயல்பட்டு வரும் 10-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளை தாம்பரம் மாநகராட்சி அல்லது சென்னை மாநகராட்சியுடன் இணைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. மக்கள் தொகை அதிகரிப்பு, நகரமயமாக்கல் மற்றும் மேம்பட்ட குடிநீர், சாலை, கழிவுநீர் வடிகால், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை விரைவாக பெறும் நோக்கில் இந்த இணைப்பு அவசியம் என அவர்கள் வலியுறுத்தினர்.

மேலும், பெருங்களத்தூர் – காமராஜபுரம் – பாரத் பொறியியல் கல்லூரி – ராஜகீழ்பாக்கம் வழியாக அமைக்கப்பட்டு வரும் தாம்பரம் கிழக்கு புறவழிச்சாலை திட்டத்தை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். இந்த சாலை திட்டம் நிறைவேறினால் போக்குவரத்து நெரிசல் குறைவதுடன், பல பகுதிகளுக்கு இடையேயான இணைப்பு வசதியும் மேம்படும் என அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement

நலச்சங்க பிரதிநிதிகள் முன்வைத்த கோரிக்கைகளை கவனமாக கேட்ட எம்.எல்.ஏ. ஹரிஷ், சம்பந்தப்பட்ட துறைகளுடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்க முயற்சி மேற்கொள்ளப்படும் என உறுதியளித்ததாக கூறப்படுகிறது.

இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால், புனித தோமையார் மலை ஒன்றியத்திற்கு உட்பட்ட பல ஊராட்சிகளின் வளர்ச்சி வேகம் அதிகரித்து, பொதுமக்களுக்கு மேம்பட்ட நகர்ப்புற வசதிகள் கிடைக்கும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement