Advertisement

“மேற்காசியப் பதற்றம்” – பிரதமர் மோடியைத் தொலைபேசியில் அழைத்துப் பேசிய இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!

மேற்காசியப் பகுதியில் அதிகரித்து வரும் போர்ச் சூழல் மற்றும் பதற்றமான நிலவரங்களுக்கு இடையே, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைத் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.

இந்த உரையாடலின் போது, மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் தற்போதைய பாதுகாப்புச் சூழல், மோதல்களைத் தவிர்த்து அமைதியைத் திரும்புவதற்கான வழிகள் மற்றும் இந்தியா-இஸ்ரேல் இடையிலான இருதரப்பு உத்திசார் உறவுகள் குறித்து இரு தலைவர்களும் விரிவாகக் கலந்துரையாடினர். பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தைத் தணிக்க உரையாடல் மற்றும் தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகளே ஒரே வழி என்றும், அப்பகுதியில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்தும் இச்சந்திப்பில் முக்கியத்துவம் கொடுத்துப் பேசப்பட்டதாகத் தெரிகிறது.

Advertisement

உலகளவில் சர்வதேசப் பொருளாதார மாற்றங்களும், மேற்காசியக் கடல்சார் வணிகப் பாதைகளில் ஏற்பட்டுள்ள சவால்களும் தீவிரமடைந்து வரும் நிலையில், இஸ்ரேல் நாட்டின் பிரதமர் நேரடியாக இந்தியப் பிரதமரைத் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தியிருப்பது சர்வதேச அரசியல் களத்தில் பெரும் கவனிப்பைப் பெற்றுள்ளது.

 

Advertisement

 

 

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement