Advertisement

விபத்தில் இறந்த சென்னை பெண் பல் மருத்துவர் குடும்பத்திற்கு ரூ.1.04 கோடி இழப்பீடு: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கும்பகோணம் அருகே நடைபெற்ற சாலை விபத்தில் அநியாயமாக உயிரிழந்த சென்னையைச் சேர்ந்த பெண் பல் மருத்துவரின் குடும்பத்தினருக்கு, ஒரு கோடியே 4 லட்சத்து 64 ஆயிரத்து 462 ரூபாயை இழப்பீடாக வழங்குமாறு தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்குச் சென்னை மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னையைச் சேர்ந்த பிரபல பல் மருத்துவர் (Dentist) இமயவள்ளி, கடந்த 2022-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15-ஆம் தேதியன்று கும்பகோணம் அருகே காரில் சென்று கொண்டிருந்தபோது நேர்ந்த பயங்கர சாலை விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்தத் திடீர் இழப்பால் நிலைகுலைந்த அவரது கணவர் ராதாகிருஷ்ணன், மகன், தந்தை மற்றும் தாய் ஆகியோர் தங்களுக்கு உரிய நஷ்டஈடு பெற்றுத்தரக் கோரி, சென்னையில் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் (Motor Accident Claims Tribunal) சட்டப்பூர்வமாக வழக்குத் தொடர்ந்திருந்தனர்.

Advertisement

இந்த வழக்கின் இறுதி விசாரணை, சிறப்பு நீதிபதி ஏ.பி. நஷீர் அலி முன்னிலையில் நடைபெற்றது. வழக்கை முழுமையாக விசாரித்த நீதிபதி, எதிரே வந்த சரக்கு வாகனம் (Goods Vehicle) அதிவேகமாகவும், மிகக் கடுமையான கவனக்குறைவாகவும் இயக்கப்பட்டதே இந்த விபத்திற்கும், பெண் மருத்துவரின் மரணத்திற்கும் முதன்மைக் காரணம் என்பது சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்கள் மூலம் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மருத்துவரின் குடும்பத்தின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு ஒரு கோடியே 4 லட்சத்து 64 ஆயிரத்து 462 ரூபாயை ‘மாக்மா எச்டிஐ ஜெனரல் இன்சூரன்ஸ் கோ லிமிடெட்’ (Magma HDI General Insurance Co. Ltd) நிறுவனம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று நீதிபதி ஏ.பி. நஷீர் அலி தனது தீர்ப்பில் அதிரடியாக உத்தரவிட்டார்.

 

Advertisement

 

 

 

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement