Advertisement

பைக் சக்கரத்தில் சிக்கி குழந்தை பலி

திருப்போரூர் அருகே ஏற்பட்ட சோகமான சாலை விபத்தில் ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்போரூர் அடுத்த அகரம் கிராமத்தைச் சேர்ந்த புஷ்பராஜ் மற்றும் அவரது மனைவி பவித்ரா, தங்களது ஒன்றரை வயது மகன் விசாகனுடன் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்து கொண்டிருந்தனர்.

Advertisement

அப்போது, பவித்ரா அணிந்திருந்த துப்பட்டா திடீரென பைக்கின் பின்சக்கரத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது. இதனால் இருசக்கர வாகனத்தின் கட்டுப்பாடு இழந்து, மூவரும் சாலையில் கீழே விழுந்தனர்.

இந்த விபத்தில் குழந்தை விசாகன் பலத்த காயமடைந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்தான். பெற்றோர் இருவரும் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement

சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement