Advertisement

கோழிப்பண்ணையைக் கடந்து சென்ற திருமண ஊர்வலம் – அடுத்தடுத்து நடந்த அதிர்ச்சி!

உத்திரப் பிரதேசம் மாநிலம் சுல்தான்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற திருமண ஊர்வலம் ஒன்று தற்போது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குத்வார் பகுதியில் உள்ள ராம் பத்ர பூர்வா கிராமத்திலிருந்து வந்த திருமண ஊர்வலத்தில் அதிக ஒலி எழுப்பும் டி.ஜே இசை ஒலிபரப்பப்பட்டது. இந்த ஊர்வலம் இரவு சுமார் 9.30 மணியளவில் அப்பகுதியில் உள்ள கோழிப்பண்ணை அருகே சென்றது.

Advertisement

அந்த பண்ணையின் உரிமையாளர் சபீர் அலி கூறுகையில், “திருமண ஊர்வலத்தின் போது ஒலித்த அதீத சத்தம் காரணமாக என் பண்ணையில் இருந்த 140 கோழிகளும் அடுத்தடுத்து இறந்துவிட்டன. இது எனக்கு பெரிய இழப்பு” என போலீசில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில், டி.ஜே ஆபரேட்டர் கவியாதவ் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. மேலும், உண்மையில் அதிக சத்தம் காரணமாகவே கோழிகள் இறந்தனவா அல்லது வேறு காரணங்கள் உள்ளனவா என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

இதற்கிடையில், விலங்குகள் மற்றும் பறவைகள் அதிக உணர்திறன் கொண்டவை என்பதால், திடீரென ஏற்பட்ட கடும் சத்தம் அவற்றிற்கு மன அழுத்தம் மற்றும் பயத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர். இதுபோன்ற சம்பவம் 2021-ல் பாலசோர் பகுதியில் 63 கோழிகள் உயிரிழந்த நிகழ்வும் நினைவுகூரப்படுகிறது.

#UttarPradesh #DJNoise #ChickenDeath #ViralNews #BreakingNews #NoisePollution #AnimalSafety #WeddingNews #IndiaNews #TrendingNow

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement