Advertisement

“மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு”: முதல்வர் மு.க. ஸ்டாலின் நெகிழ்ச்சி அறிக்கை!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஆளும் தி.மு.க. கூட்டணிக்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ள நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மக்களின் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்பதாக அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளார். வெற்றி பெற்றவர்களுக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள அவர், தி.மு.க.-வின் அரசியல் பயணம் எவ்விதத் தொய்வுமின்றித் தொடரும் எனப் பிரகடனம் செய்துள்ளார்.

தேர்தல் முடிவுகள் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையின் முக்கிய அம்சங்கள், 
கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு சிறப்பான நல்லாட்சியை வழங்கினோம்.

Advertisement

மக்களுக்குச் செய்து கொடுத்த நலத்திட்டங்கள் தொடர வேண்டும் என்பதற்காகவே வாக்கு கேட்டோம்; எனது சக்தியை மீறி உழைத்தேன், மனச்சாட்சிப்படியே செயல்பட்டேன்.  வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்தே நான் ஆட்சி நடத்தினேன். களத்தில் உழைத்த தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் மற்றும் தோழமை இயக்கத் தலைவர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

வெற்றி தோல்விகளைக் கடந்தே தனது அரசியல் பயணம் அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், அடுத்தகட்ட நகர்வு குறித்துத் தெளிவுபடுத்தியுள்ளார். எனது பொதுவாழ்வில் பல வெற்றிகளையும் தோல்விகளையும் சந்தித்துள்ளேன்; எனக்கு இலட்சியமும் கொள்கையும்தான் முக்கியமே தவிர, வெற்றி தோல்விகள் அல்ல. இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க., இனி சட்டப்பேரவையில் ஒரு வலிமையான மற்றும் சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும்.

Advertisement

தமிழகம் முழுவதும் தவெக 109 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ள நிலையில், கொளத்தூர் தொகுதியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பின்னடைவைச் சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முன்னதாகத் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தவெக தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றுத் தனது சான்றிதழைப் பெற்றுள்ள சூழலில், தி.மு.க. தலைவரின் இந்த அறிக்கை ஒரு முதிர்ச்சியான அரசியல் நகர்வாகப் பார்க்கப்படுகிறது.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement