Advertisement

“தமிழகத்திற்குப் பாய்ந்து வரும் காவிரி நீர்” – கபினி அணையிலிருந்து வினாடிக்கு 25,000 கன அடி நீர் திறப்பு!

காவிரி நதியின் முக்கிய நீர்ப்பிடிப்புப் பகுதிகளான கேரளாவின் வயநாடு மற்றும் குடகு மாவட்டங்களில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் கனமழை காரணமாகக் கர்நாடகாவில் உள்ள கபினி அணைக்கு நீர்வரத்து மாபெரும் அளவில் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அணையின் பாதுகாப்பைக் கருதி, தமிழகத்திற்குத் திறந்துவிடப்படும் நீரின் அளவு வினாடிக்கு 25,000 கன அடியாக அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாகக் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி தண்ணீரைக் கர்நாடக அரசு திறக்கத் தயங்கி வந்த நிலையில், தற்போது தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து இயற்கையின் கொடையால் அணைக்கு வரும் நீரின் அளவு வெள்ளமாக உருவெடுத்துள்ளது. மைசூரு அருகே அமைந்துள்ள கபினி அணையின் நீர்மட்டம் அதன் முழுக்கொள்ளளவை எட்டும் தருவாயில் உள்ளதால், அணைக்கு வரும் உபரிநீர் முழுமையாகக் காவிரியில் திறந்துவிடப்பட்டு வருகிறது.

Advertisement

கபினியிலிருந்து பாய்ந்து வரும் இந்த உபரிநீர் அடுத்த ஓரிரு நாட்களில் தமிழ்நாட்டின் எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடையும் என்றும், அதனைத் தொடர்ந்து மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாகக் உயரத் தொடங்கும் என்றும் நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் டெல்டா பாசன விவசாயிகள் பெரும் மகிழ்ச்சிய அடைந்துள்ளனர்.

அதேவேளையில், ஆற்றில் நீரோட்டம் பாய்ந்து வருவதால், காவிரி மற்றும் கபினி ஆற்றின் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும், ஆற்றில் இறங்கவோ அல்லது குளிக்கவோ வேண்டாம் என்றும் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை சார்பில் கடுமையான வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

 

 

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement