Advertisement

வெளியூர் செல்வோருக்குக் குட் நியூஸ்! சிறப்புப் பேருந்துகளைக் களமிறக்கும் போக்குவரத்துத் துறை!

சுதந்திர தினத் தொடர் விடுமுறையை முன்னிட்டு கிளாம்பாக்கம், கோயம்பேடு மற்றும் மாதவரத்தில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் எனப் போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

சுதந்திர தினத் தொடர் விடுமுறையை முன்னிட்டு, பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு எவ்வித சிரமமும் இன்றிச் சென்று வர வசதியாக, சென்னையிலுள்ள முக்கியப் பேருந்து முனையங்களில் இருந்தும் மற்றும் மாநிலத்தின் பிற பகுதிகளில் இருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் எனத் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.வருகிற ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தின விழா சனிக்கிழமை வருவதாலும், அதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை வாராந்திர விடுமுறை அமைவதாலும், தொடர் விடுமுறையைக் கொண்டாட ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான பொதுமக்கள் வெளியூர்களுக்குப் படையெடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்திப் பயணிகளின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், ஆகஸ்ட் 14 (வெள்ளிக்கிழமை) மற்றும் ஆகஸ்ட் 15 (சனிக்கிழமை) ஆகிய நாட்களில் சென்னை கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம், கோயம்பேடு மற்றும் மாதவரம் ஆகிய இடங்களிலிருந்து திருச்சி, மதுரை, நெல்லை, கோவை, சேலம், திருவண்ணாமலை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்குத் தடையின்றிப் பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதேபோல, தொடர் விடுமுறை முடிந்து பொதுமக்கள் மீண்டும் பணிநிமித்தமாகச் சென்னை மற்றும் பிற தொழில் நகரங்களுக்குத் திரும்புவதற்காக ஆகஸ்ட் 16 (ஞாயிற்றுக்கிழமை) அன்றும் பிற ஊர்களில் இருந்து சென்னைக்குச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. கடைசி நேரக் கூட்ட நெரிசலையும், பயணக் அலைச்சலையும் தவிர்க்கும் பொருட்டு பயணிகள் முன்னதாகவே TNSTC அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது செயலி வாயிலாகத் தங்களது பயணங்களை முன்பதிவு செய்து தடையற்ற சேவையைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு போக்குவரத்துத் துறை நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Advertisement

 

 

 

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement