Advertisement

சகோதரியின் கணக்கிலிருந்த ₹20,000 வழங்க மறுத்த வங்கி – உடலை எடுத்துக்கொண்டு வந்த அதிர்ச்சி சம்பவம்

இறந்துவிட்டதாக பலமுறை கூறியும் நம்பாத வங்கி ஊழியர்களுக்கு நிரூபிப்பதற்காக, சகோதரியின் உடலை தோண்டி எடுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர், தனது சகோதரியின் வங்கி கணக்கில் இருந்த 20,000 ரூபாயை எடுக்க முயன்றுள்ளார். ஆனால், பணத்தை பெற சகோதரி நேரில் வர வேண்டும் என வங்கி ஊழியர்கள் கூறியுள்ளனர். ஆனால், தனது சகோதரி இறந்துவிட்டார் என அவர் பலமுறை தெரிவித்தும், தேவையான ஆவணங்களை சமர்ப்பித்தும் பணம் வழங்கப்படவில்லை.

Advertisement

இதனால் விரக்தியடைந்த அந்த நபர், தனது சகோதரியின் உடலை கல்லறையிலிருந்து தோண்டி எடுத்து வங்கி கிளைக்கு கொண்டு வந்து காட்டியுள்ளார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியதோடு, வங்கி நடைமுறைகள் குறித்து கடும் விமர்சனங்களையும் கிளப்பியுள்ளது.

Odisha #BankIssue #ViralNews #Shocking #Trending

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement