Advertisement

“தேர்தல் வாக்குறுதிகள் குறித்து முதலமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும்” – சிபிஐ மாநிலச் செயலாளர் அறிக்கை!

தமிழக அரசின் திருத்திய வரவு-செலவுத் திட்டத்தில் (பட்ஜெட்) மகளிருக்கு மாதம் ரூ.2,500 வழங்கும் ‘வெற்றி மகளிர்’ திட்டம் மற்றும் வேலைவாய்ப்பற்ற பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ.4,000 உதவித்தொகை வழங்குவது குறித்த அறிவிப்புகள் இடம்பெறாதது குறித்து முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் உடனடியாக நாட்டு மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின் போது அளிக்கப்பட்ட முக்கிய வாக்குறுதிகளான குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500 உரிமைத் தொகை, வேலையில்லா பட்டதாரிகளுக்குத் திங்கள்தோறும் ரூ.4,000 நிதியுதவி, ஆண்டுக்கு 6 இலவச சமையல் எரிவாயு உருளைகள் ஆகியவை தற்போதைய பட்ஜெட்டில் சேர்க்கப்படாதது பொதுமக்கள் மற்றும் இளைஞர்களிடையே பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

Advertisement

மாநிலத்தின் நிதி நெருக்கடி மற்றும் கடன் சுமையைக் காரணம் காட்டி முக்கிய மக்கள் நலத் திட்டங்களின் அறிவிப்புகளைத் தள்ளிப்போடுவது ஏற்புடையதல்ல என்றும், மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்போது, எவ்வாறு நிறைவேற்றப் போகிறோம் என்பது குறித்து முதலமைச்சர் ஜோசப் விஜய் சட்டப்பேரவையிலும் வெளியிலும் தெளிவான விளக்கத்தை முன்வைக்க வேண்டும் என்றும் இரா. முத்தரசன் தனது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

Advertisement

 

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement