Advertisement

சென்னை சேத்துப்பட்டு இயற்கை எரிவாயு ஆலையில் முதலமைச்சர் விஜய் அதிரடி ஆய்வு!

சென்னை சேத்துப்பட்டு பகுதியில் இயங்கி வரும் மக்கும் குப்பைகளில் இருந்து இயற்கை எரிவாயு (Bio-CNG) தயாரிக்கும் பிரத்யேக ஆலையில் தமிழக முதலமைச்சர் விஜய் இன்று நேரில் சென்று அதிரடி ஆய்வு மேற்கொண்டார்.

பெருநகர சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணிகளை மேம்படுத்தவும், நகரில் நாள்தோறும் சேரும் கழிவுகளை உள்கட்டமைப்பு ரீதியாக மறுசுழற்சி செய்யவும் பல்வேறு கட்ட நடவடிக்கைகளைத் தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, பொது மற்றும் தனியார் கூட்டுப் பங்களிப்பு (PPP Model) முறையில் இயங்கி வரும் ‘சீனிவாசா வேஸ்ட் மேனேஜ்மென்ட்’ (Srinivasa Waste Management) நிறுவனத்தின் இயற்கை எரிவாயு உற்பத்தி மையத்திற்கு முதலமைச்சர் விஜய் அவர்கள் நேரில் வருகை தந்தார்.

Advertisement

அங்கு மக்கும் குப்பைகளைச் சேகரித்துத் தரம் பிரிக்கும் முறைகள், அவற்றைச் சுத்திகரித்து இயற்கை எரிவாயு மற்றும் இயற்கை உரமாக மாற்றும் அதிநவீனத் தொழில்நுட்பச் செயல்பாடுகளை அவர் கேட்டறிந்து ஆய்வு செய்தார். மேலும், இந்த ஆலையின் தினசரி உற்பத்தித் திறன் மற்றும் இங்கிருந்து தயாரிக்கப்படும் மாற்று எரிபொருளைப் பயன்பாட்டிற்குக் கொண்டு செல்லும் முறைகள் குறித்து நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுடனும் சென்னை மாநகராட்சி அலுவலர்களுடனும் விரிவாகக் கலந்தாலோசித்தார். சென்னை மாநகராட்சியில் தினமும் சேரும் ஆயிரக்கணக்கான டன் கழிவுகளைக் குறைத்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்ய இதுபோன்ற கழிவிலிருந்து ஆற்றல் தயாரிக்கும் திட்டங்களைப் பரவலாக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக இந்த ஆய்வின் போது தெரிவிக்கப்பட்டது.

 

Advertisement

 

 

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement