Advertisement

மே 4 பிறந்தநாள்: இப்போதே கொண்டாட்டத்தில் குதித்த த்ரிஷா! போட்டோக்கள் வைரல்!

தன்னிந்தியத் திரையுலகின் ‘எவர்கிரீன்’ நாயகி த்ரிஷா, வரும் மே 4-ஆம் தேதி தனது 43-வது பிறந்தநாளைக் கொண்டாடத் தயாராகி வருகிறார். இதையொட்டி, தனது நெருங்கிய தோழிகளுடன் அவர் இப்போதே பிறந்தநாள் கொண்டாட்டங்களைத் தொடங்கியுள்ளார். “பெயரிட முடியாத சில அழகிய நட்புகள் உண்டு” என்ற நெகிழ்ச்சியான வாசகத்துடன் அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் செம்ம வைரலாகி வருகின்றன.

1999-ஆம் ஆண்டு ‘ஜோடி’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகமாகி, இன்று ரஜினி, கமல், விஜய், அஜித் என அனைத்து டாப் ஹீரோக்களுடனும் ஜோடி சேர்ந்து 75 படங்களைக் கடந்தவர் த்ரிஷா. குறிப்பாக ‘அபியும் நானும்’ படத்திற்காக மாநில விருது, கலைமாமணி விருது எனப் பல அங்கீகாரங்களைப் பெற்றுள்ள அவர், அண்மையில் ‘லியோ’, ‘தக் லைஃப்’, ‘விடா முயற்சி’ எனப் பெரிய பட்ஜெட் படங்களில் பிஸியாகப் பணியாற்றி முடித்துள்ளார். அவர் நடிப்பில் சூர்யாவுடன் இணைந்து நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படம் வரும் மே 14-ஆம் தேதி திரைக்கு வரவுள்ளதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Advertisement

சமீபகாலமாக த்ரிஷா புதிய படங்கள் எதிலும் கமிட் ஆகாமல் இருப்பதால், அவர் திரையுலகை விட்டு விலகப் போகிறாரா என்ற ஒரு வதந்தி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. கடந்த 3 மாதங்களாகப் புதிய அறிவிப்புகள் ஏதும் இல்லாததே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. இருப்பினும், கைவசம் உள்ள பெரிய படங்கள் வரிசையாக வெளியாகவுள்ள நிலையில், இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை.

தற்போது 43-வது வயதில் அடியெடுத்து வைக்கும் த்ரிஷா, தனது சினிமா வாழ்க்கையின் 25-வது ஆண்டையும் நெருங்கி வருகிறார். மே 4-ஆம் தேதி அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கும் படங்களின் புதிய அப்டேட்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கு முன்னதாகவே தோழிகளுடன் அவர் எடுத்துள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளன.

Advertisement

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement