Advertisement
,

தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரியின் உடல் தனி விமானம் மூலம் சென்னை வருகை!

ராஜஸ்தான் மாநிலத்தில் நேர்ந்த கார் விபத்தில் உயிரிழந்த பிரபலத் திரைப்படத் தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரியின் உடல், இன்று காலை தனி விமானம் மூலம் சென்னைக்குக் கொண்டுவரப்பட்டது.

சூப்பர் குட் பிலிம்ஸ் (Super Good Films) நிறுவனத்தின் உரிமையாளரும், நடிகர் ஜீவா மற்றும் ஜித்தன் ரமேஷ் ஆகியோரின் தந்தையுமான ஆர்.பி.சவுத்ரி, தொழில் நிமித்தமாகத் தனது பூர்வீக மாநிலமான ராஜஸ்தானிற்குச் சென்றிருந்தார்.

Advertisement

ராஜஸ்தானின் ஜோத்பூரிலிருந்து உதய்பூருக்குக் காரில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாகக் கார் விபத்துக்குள்ளானது. விபத்தில் சிக்கிய அவரை மீட்ட அங்கிருந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இருப்பினும், மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலனின்றி அவர் அகால மரணமடைந்தார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் உடற்கூறு ஆய்வுப் பணிகள் முடிவடைந்த நிலையில், இன்று காலை அவரது உடல் ஜெய்ப்பூரிலிருந்து தனி விமானம் மூலம் சென்னைக்குக் கொண்டுவரப்பட்டது. சென்னை பழைய விமான நிலையத்தில் அவரது மகன்களான நடிகர் ஜீவா மற்றும் நடிகர் ஜித்தன் ரமேஷ் ஆகியோர் தங்களது தந்தையின் உடலைப் பெற்றுக்கொண்டனர். விமான நிலையத்திலிருந்து அவரது உடல் சென்னை தியாகராய நகரில் உள்ள இல்லத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்குத் திரையுலகப் பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது.

Advertisement

தமிழ் சினிமாவில் ‘நாட்டாமை’, ‘சூர்யவம்சம்’ போன்ற குடும்பங்கள் கொண்டாடும் எண்ணற்ற வெற்றிப் படங்களைத் தந்தவர் ஆர்.பி.சவுத்ரி. சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் படங்கள் என்றாலே மக்கள் மத்தியில் எப்போதும் தனி வரவேற்பு உண்டு. தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளால் மாநிலமே பரபரப்பாக உள்ள நிலையில், திரையுலகின் ஒரு பெரும் தூணாக விளங்கிய இவரது மறைவு திரையுலகினரிடையே ஈடுசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement